Wednesday, March 3, 2010

91. பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா - நாம்
பாடிப் புகழ்வோம் நேசா.

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.

1.எருசலேமின் பதியே - சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2.பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.

3.குருத்தோலைகள் பிடிக்க - பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
Save Page As PDF

No comments: