Tuesday, September 7, 2010

176. சோர்ந்து போகாதே என் நண்பனே

1.சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே - 2

2.என் ஆத்மநேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
தினமும் நடத்துவார்

3.நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்

Save Page As PDF

Thursday, September 2, 2010

175. இது சிந்திக்கும் காலம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே நீ மௌனமாயிருக்காதே

1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

2.இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

3.பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது
உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?



Save Page As PDF

174. யோசனையில் பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1.கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

2.சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

3.வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

4.தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

5.பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை

Save Page As PDF

Wednesday, June 23, 2010

173. ஆதாரம் நீர்தானையா

ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற; கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1.உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) - என் நிலை மாற ... - ஆதாரம்

2.குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) - என் நிலை மாற ... - ஆதாரம்

3.உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) - என் நிலை மாற ... - ஆதாரம்


Save Page As PDF

172. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Save Page As PDF

171. படகோ படகு கடலிலே படகு

படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே

1.வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே - படகோ

2.குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே - படகோ

Save Page As PDF

170. சின்னஞ் சிட்டுக் குருவியே

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு .......
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
அழகாக படைச்சது யாரு

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா - அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல...ல...ல...ல...ல...ல...


Save Page As PDF

Friday, June 18, 2010

169. அன்பரின் நேசம் ஆர் சொல்ல

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் - அதிசய

1.இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே - அதிசய

2.பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே - அதிசய

3.வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? - அதிசய

4.செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய

5.பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே - அதிசய

Save Page As PDF

Monday, June 7, 2010

168. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

1.மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4.திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Save Page As PDF

Friday, June 4, 2010

167. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் - (2)
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா .....(4)

2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
இரவும் பகலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்

3.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான்
இரவும் பகலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத் தான் நான் நேசிப்பேன்

4.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
Save Page As PDF

166. இயேசுவே உம் நாமத்தினால்

1.இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்

2.நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே

3.பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்

4.உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே

5.இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்

Save Page As PDF

165. இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1.உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2.தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3.உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Save Page As PDF

Wednesday, May 19, 2010

164. கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் - இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் - அவர்
நமையினால் வழி நடத்திடுவார் - நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் - மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் - நெஞ்சமே
Save Page As PDF

163. கர்த்தரின் கை குறுகவில்லை

1.கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2.திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் - விசுவாசியே

3.நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே

4.மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் - விசுவாசியே
Save Page As PDF

162. அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1.காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

2.பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

3.தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

Save Page As PDF

Tuesday, May 18, 2010

161. அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1.பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்; கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2.நோயையும் ஏற்றவர் ; பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை; நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே; நேயமாய் அழைக்கிறார்

3.துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே; துரிதமாய் நீ வாராயோ

4.அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட ; இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்; சந்திப்பார் நீ வாராயோ

5.கல்லறை திறக்க; காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே ; கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6.சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே, வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே; தந்துனை அழைக்கிறார்

Save Page As PDF

Monday, May 17, 2010

160. பயப்பட மாட்டேன் நான் பயப்பட

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்

1.உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2.காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3.பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

4.பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நான் தொடர்ந்து ஓடுவேன்

5.வலைகள் வீசுவோம் மீன்களை பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

6.உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Save Page As PDF

159. ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)

1.மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே

2.கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்

3.எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4.ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Save Page As PDF

158. என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சித்தவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர் - நான்
யாருக்கும் அஞ்சமாட்டேன்

1.தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
தந்தை இயேசென்னை சேர்த்துக்கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்

2.தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
தேவன் அருகில் வந்து என்னை காத்திடுவார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே

Save Page As PDF

157. ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2 )

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் - ஊற்றப்பட

1.தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்

2.ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்

3.ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்

4.ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் - எண்ணெய்

5.ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே - எண்ணெய்

Save Page As PDF

156. சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே (2)
சந்தோசம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் பொங்கி பொங்குதே

1.வழி தப்பி நான் திரிந்தேன் பாவ பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக்குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம்நீங்கிற்றே

2.சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே

3.பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்

Save Page As PDF

Friday, May 14, 2010

155. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

1.இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2.நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3.விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4.இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5.ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6.அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Save Page As PDF

154. அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் - என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் - என்னை
அணைத்துக் கொண்டீரே

1.தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது - 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது - 2

2.வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை - 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - 2

3.கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை - 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை - 2

Save Page As PDF

153. அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் ()

1.தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3.பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் - இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Save Page As PDF

152. சுத்தம் பண்ணப் படாத தேசமே

சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1.பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2.தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3.வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)
Save Page As PDF

Sunday, May 9, 2010

151. விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது - (2)
அக்கரை நோக்கி - (2)

1.பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

2.ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

3.நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

Save Page As PDF

150. வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே

வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

1.நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே

2.ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே
3.சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே

4.பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே

5.வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

Save Page As PDF

149. வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் - இயேசு

1.இயேசுவே தெய்வம் - ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் - மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் - தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் - மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)

2.இயேசுவே இரட்சகர் - உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் - உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் - கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் - ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)
Save Page As PDF

Friday, May 7, 2010

148. சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) - சந்தோஷ

1.நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

2.விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

3.துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

4.என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

Save Page As PDF

147. காணிக்கை தந்தோம் கர்த்தாவே

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

1.நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்
இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

2.ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

3.காணிக்கை தான் செலுத்த வந்தோம்
கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம்
புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே
Save Page As PDF

146. புதிய பாடல் பாடி பாடி

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1.கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

2.உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே - தினமும்

3.அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே - எல்லா

4.கூப்பிட்டேன் பதில் வந்தது
குறையெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா - அவர்
மகத்துவமானவரே - இயேசு

Save Page As PDF

145. நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1.செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய்

2.உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3.ஜீவனைத் தியாகமாய் வைத்தப் பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4.மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தைச் சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

5.அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க் களிப்பீர்

6.சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் ராஜனையே

Save Page As PDF

144. இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(4)
துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)

1.சமாதானம் தந்தார் இயேசு ( 4)

2.புதுவாழ்வு தந்தார் இயேசு ( 4)

3.விடுதலை தந்தார் இயேசு ( 4)

4.புதுப் பாடல் தந்தார் இயேசு (4 )

5.அபிஷேகம் தந்தார் இயேசு (4 )

Save Page As PDF

143. இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2)

1.உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2.தனிமரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3.உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)


Save Page As PDF

142. எந்தன் அன்புள்ள ஆண்டவர்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப்போல் ஒருதேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே!

1.பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

2.பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

3.உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்

4.எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

5.பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே

Save Page As PDF

141. கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

1.கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

2.கரங்களை அசைத்துப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

3.கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

Save Page As PDF

Thursday, May 6, 2010

140. சாலேமின் ராசா சங்கையின் ராசா

1.சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் - இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?

3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; - இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

5.சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; - உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

Save Page As PDF

139. குயவனே குயவனே படைப்பின்

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே

3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

Save Page As PDF

138. இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1.உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்

2.பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

Save Page As PDF

137. அநாதி சிநேகத்தால் என்னை

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1.அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே

2.தாயின் கருவில் தோன்று முன்னே தெரிந்து கொண்டீரே
தாயை போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே

3.நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா

4.கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

Save Page As PDF

Wednesday, May 5, 2010

136. வரவேணும் எனதரசே மனு

வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1.வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே - வரவே

2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் -வரவே

3.வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! - வரவே




Save Page As PDF

135. கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே - என்

1.பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த - கல்வாரியே

2.பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத - கல்வாரியே

3.நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் - கல்வாரியே
4.முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் - கல்வாரியே

5.சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ - கல்வாரியே

6.எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா - கல்வாரியே

7.இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் - கல்வாரியே

Save Page As PDF

Friday, April 23, 2010

134. ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த

ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1.பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

2.ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே

3.நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே

4.அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே

5.வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே

6.உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே
Save Page As PDF

133. கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1.வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே - கதிரவன்

2.காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் - கதிரவன்

3.கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் - கதிரவன்

4.எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே - கதிரவன்

5.காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் - கதிரவன்

6.வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் - கதிரவன்
Save Page As PDF

132. அன்பே அன்பே அன்பே

அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

1.ஒரு நாளுந்தயை கண்டேனையா
அன்னா ளெனை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா - அன்பே

2.பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரி லன்பேனையா
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ - அன்பே

3.அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - என்னையும்
அணைத்தீர் அன்பாலே - அன்பே

4.பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா - அன்பே

5.இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ - அன்பே

Save Page As PDF

Tuesday, April 20, 2010

131. மகிமை மாட்சிமை நிறைந்தவரே

மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1.உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

2.ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

3.பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

4.நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

5.அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் - மகிமை
Save Page As PDF

Monday, April 12, 2010

130. இந்த காலம் பொல்லாதது

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1.உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2.வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3.பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4.காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்


Save Page As PDF

129. ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1.அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்தி

2.ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்தி

3.மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்தி

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே - ஸ்தோத்தி

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்தி

Save Page As PDF

Wednesday, March 31, 2010

128. நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - நீயும் சேவிப்பாயா?

1.கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3.நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4.நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Save Page As PDF

127. கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே - இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே - கிருபை

2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபை

3.அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபை

4.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் - கிருபை

5.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபை

Save Page As PDF

126. வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே

1.வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்

2.சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே

3.காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே

4.சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே


Save Page As PDF

125. பூரண ஆசீர் பொழிந்திடுமே

1.பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2.ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3.தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5.குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6.மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Save Page As PDF

Tuesday, March 30, 2010

124. ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1.வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2.உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3.சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4.பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5.இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Save Page As PDF

123. எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க

எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

1.சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே - அல்லேலூயா

2.சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா

3.பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா

4.களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் - அல்லேலூயா


Save Page As PDF

Monday, March 29, 2010

122. தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்

இயேசுவே உம் திவ்ய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே

1.வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண் பாருமே - தேவா

2.சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம் - தேவா

3.கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம் - தேவா

4.கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே - தேவா

5.நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளன் நீர் வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே - தேவா

6.எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே - தேவா


Save Page As PDF

121. என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

1.மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் - பேசும்

2.பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்டச்செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் - பேசும்

3.என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் - பேசும்



Save Page As PDF

120. மேகமே மகிமையின் மேகமே

மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

1.ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே

2.வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்

3.மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே

4.வாழ்க்கைப் பயணத்திலே
முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

5.கையளவு மேகம்தான்
பெருமழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும்
பெருமழை (அருள்மழை) வேண்டுமே


Save Page As PDF

119. லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

லேசான காரியம் எதுவும் லேசான காரியம்
பெலமுள்ளவன் பெலனற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

1.மண்ணை பிசைந்து மனிதனை படைத்தது லேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

2.கூழங்கல்லாலே கோலியாத் விழுந்தது லேசான காரியம்
ஆழ்கடல் மீனில் வரிப்பணம் பெறுவதும்
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

3.கற்பாறை போலே கடல் மேல் நடப்பது லேசான காரியம்
கற்சாடி நீரை கனிரசம் ஆக்குதல்
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்


Save Page As PDF

118. உள்ளமெல்லாம் உருகுதையோ

1.உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2.எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3.மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ


Save Page As PDF

Thursday, March 25, 2010

117. கல்வாரி அன்பை எண்ணிடும்

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1.கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே - கல்வாரி

2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே - கல்வாரி

3.எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்து விட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி


Save Page As PDF

116. பாரீர் கெத்சமனே பூங்காவிலென்

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1.தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்

2.அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்

3.இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4.மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்

5.அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்

6.என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்


Save Page As PDF

Tuesday, March 23, 2010

115. யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1.வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே - யூத

2.வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே - யூத

3.மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன - யூத

4.எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே - யூத

5.மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

6.உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

7.பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

8.கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம்
Save Page As PDF

114. உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1.கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே

2.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4.மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5.ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே









Save Page As PDF

Monday, March 22, 2010

113. கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - கைகொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ ஆ கீதம்

1.பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் - அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ - தேவ
புத்திரர் சந்நிதி முன் - ஆ ஆ கீதம்

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ ஆ கீதம்

3.அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் - நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்


Save Page As PDF

112. அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்

1.மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே - அந்தோ

2.அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ

3.அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே - அந்தோ

4.சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் - அந்தோ


Save Page As PDF

111. கர்த்தர் துயர் தொனியாய்

கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1.மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் - கர்த்தர்

2.துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே - கர்த்தர்

3.பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் - கர்த்தர்

4.திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ - கர்த்தர்

5.பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் - கர்த்தர்

6.இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் - கர்த்தர்


Save Page As PDF

110. ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1.கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு

2.மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் - ஏறு

3.இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே - ஏறு

4.சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு

5.பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு

6.செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க - ஏறு
Save Page As PDF

Sunday, March 21, 2010

109. பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1.காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை - பாவி

2.கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே - பாவி

3.கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ - பாவி

4.உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா - பாவி


Save Page As PDF

Friday, March 19, 2010

108. தேவ தேவனைத் துதித்திடுவோம்

1.தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே

2.எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போலக் காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும் - அல்லேலூயா

3.சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம் - அல்லேலூயா

4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம் - அல்லேலூயா

5.வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் - அல்லேலூயா


Save Page As PDF

107. பனிபோல பெய்யும் பரிசுத்தரே

பனிபோல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே (2 )
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே (2 )

1.வெண்மையானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி - 2
ஆனந்த தைலமே

2.யுத்தங்கள் செய்பவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த - 2
உள்ளங்கை மேகமே

3.வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக - 2
காப்பாற்றி வளர்ப்பவரே


Save Page As PDF

106. என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

1.நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் - என்

2.இவரே நல்ல நேசர் - என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் - என்

3.பார்போற்றும் ராஜன் - புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் - என்

Save Page As PDF

105. உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம் - இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா - அல்லேலூயா(2 )

1.பாவியான என்னையும் - உம்
பிள்ளையாய் மாற்றினீர்

2.என்னை அழைத்தவரே - நீர்
உண்மையுள்ளவரே

3.உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4.என்னை முன் குறித்தீரே - நீர்
கைவிடவே மாட்டீர்

5.என்னை மறுரூபமாக்கிடும் - உந்தன்
மகிமையில் சேர்த்திடும்


Save Page As PDF

Tuesday, March 16, 2010

104. உங்க கிருபை தான் என்னைத்

உங்க கிருபை தான்
என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபை தான்
என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே

1.உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது

2.சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

3.ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

4.ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்தக் கிருபை இது

Save Page As PDF

103. எந்தன் கன்மலையானவரே

1.எந்தன் கன்மலையானவரே
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே

2.உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே

3.எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே

4.எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்

Save Page As PDF