Friday, March 12, 2010

97. எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1.விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற, - விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற - எழுந்தார்

2.செத்தவர் மீண்டுமே பிழைக்க, - உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர் யாவரும் களிக்க - எழுந்தார்

3.கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க, - நம்
இரு திறத்தாரையும் சேர்க்க - எழுந்தார்

4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக், - கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க, - இப்
பூவின் மீதுசபை செழிக்க - எழுந்தார்

5.ஏதுந் தீவினை செய்யாத் தூயன், - எப்
போதுமே நன்மைபுரி நேயன் - தப்
பாது காத்திடும் நல்லாயன் - எழுந்தார்
Save Page As PDF

No comments: