Friday, March 19, 2010

106. என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

1.நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் - என்

2.இவரே நல்ல நேசர் - என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் - என்

3.பார்போற்றும் ராஜன் - புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் - என்

Save Page As PDF

No comments: