Thursday, March 11, 2010

96. ஆமென், அல்லேலூயா! மகத்துவ

ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

1.வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து - முறித்து;
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார் - ஆமென்

2.சாவின் கூர் ஒடிந்து - மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்

3.வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்



Save Page As PDF

No comments: