Tuesday, September 7, 2010

176. சோர்ந்து போகாதே என் நண்பனே

1.சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே - 2

2.என் ஆத்மநேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
தினமும் நடத்துவார்

3.நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்

Save Page As PDF

Thursday, September 2, 2010

175. இது சிந்திக்கும் காலம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே நீ மௌனமாயிருக்காதே

1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

2.இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

3.பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது
உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?



Save Page As PDF

174. யோசனையில் பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1.கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

2.சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

3.வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

4.தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

5.பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை

Save Page As PDF