Monday, March 22, 2010

113. கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - கைகொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ ஆ கீதம்

1.பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் - அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ - தேவ
புத்திரர் சந்நிதி முன் - ஆ ஆ கீதம்

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ ஆ கீதம்

3.அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் - நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்


Save Page As PDF

No comments: