Friday, March 12, 2010

98. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்

1.இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்

2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந் தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - மகிழ்

3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட - மகிழ்

4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்,
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன்; - மகிழ்

5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்;
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் - மகிழ்

Save Page As PDF

No comments: