Sunday, February 14, 2010

90. பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

1.நாதனே துங்க மெய் - வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ் செய்ய - பாதம்

2.சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன் - பாதம்

3.வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த பொற் - பாதம்

4.போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் - பாதம்

5.நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் - பாதம்

6.பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு - நாதனே என்றும் உன் - பாதம்

Save Page As PDF

No comments: