Wednesday, May 5, 2010

135. கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே - என்

1.பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த - கல்வாரியே

2.பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத - கல்வாரியே

3.நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் - கல்வாரியே
4.முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் - கல்வாரியே

5.சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ - கல்வாரியே

6.எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா - கல்வாரியே

7.இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் - கல்வாரியே

Save Page As PDF

No comments: