Friday, May 7, 2010

146. புதிய பாடல் பாடி பாடி

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1.கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

2.உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே - தினமும்

3.அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே - எல்லா

4.கூப்பிட்டேன் பதில் வந்தது
குறையெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா - அவர்
மகத்துவமானவரே - இயேசு

Save Page As PDF

No comments: