Tuesday, May 18, 2010

161. அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1.பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்; கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2.நோயையும் ஏற்றவர் ; பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை; நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே; நேயமாய் அழைக்கிறார்

3.துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே; துரிதமாய் நீ வாராயோ

4.அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட ; இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்; சந்திப்பார் நீ வாராயோ

5.கல்லறை திறக்க; காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே ; கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6.சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே, வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே; தந்துனை அழைக்கிறார்

Save Page As PDF

No comments: