Friday, April 23, 2010

134. ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த

ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1.பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

2.ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே

3.நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே

4.அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே

5.வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே

6.உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே
Save Page As PDF

No comments: