Friday, April 23, 2010

132. அன்பே அன்பே அன்பே

அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

1.ஒரு நாளுந்தயை கண்டேனையா
அன்னா ளெனை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா - அன்பே

2.பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரி லன்பேனையா
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ - அன்பே

3.அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - என்னையும்
அணைத்தீர் அன்பாலே - அன்பே

4.பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா - அன்பே

5.இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ - அன்பே

Save Page As PDF

No comments: