Wednesday, October 28, 2009

72. வாரும் நாம் எல்லாரும் கூடி,

வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம் - சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் - வாரும்

2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் - வாரும்

3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் - வாரும்

4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே - இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் - வாரும்

5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே - அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் - வாரும் Save Page As PDF

No comments: