Monday, October 26, 2009

67. ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே - இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே - பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! - ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் - இதோ! - ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் - அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! - ஆத்துமா

Save Page As PDF

No comments: