Tuesday, October 20, 2009

65. ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ - இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1.பாருருவாகுமுன்னே - இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? - ஆர்

2.மேசியா இவர்தானோ? - நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? - ஆர்

3.தித்திக்குந் தீங்கனியோ? - நமது

தேவனின் கண்மணியோ?

மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய

மேவிய விண் ஒளியோ? - ஆர்


4.பட்டத்துத் துரைமகனோ? - நம்மை

பண்புடன் ஆள்பவனோ?

கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்

காட்டிடுந் தாயகனோ? - ஆர்


5.ஜீவனின் அப்பமோதான்? - தாகம்

தீர்த்திடும் பானமோதான்?

ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல

மானவர் இவர்தானோ? - ஆர்






Save Page As PDF

No comments: