Friday, October 23, 2009

66. ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார் - ஆ!

1.அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!

2.ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் - ஆ!

3.ஞானியர் தேட, வானவர் பாட - மிக
நன்னய, உன்னத - பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் - ஆ!

4.கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் - சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் - ஆ!

5.விண்ணுடு தோண, மன்னவர் பேண - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் - ஆ!
Save Page As PDF

No comments: