Monday, November 2, 2009

73. ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ் - ஆனந்தமே

1.சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை - வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால், - புகழ் - ஆனந்தமே

2.முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் - புகழ் - ஆனந்தமே

3.பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை - இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் - புகழ் - ஆனந்தமே Save Page As PDF

No comments: