Wednesday, November 25, 2009

76. கர்த்தாவே யுகயுகமாய்

1.கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2.உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3.பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்;
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4.ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.

5.சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6.கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர். Save Page As PDF

No comments: