Tuesday, November 10, 2009

74. எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, - எந்நாளு

1.பாவங்கள் எத்தனையோ? - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி, - எந்நாளு

2.எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி,
நித்தியமான ஜீவனை மீட்டதால், - எந்நாளு

3.நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால், - எந்நாளு

4.பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது; - எந்நாளு

5.மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவன ருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றத்தூரமே - எந்நாளு

6.தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - எந்நாளு Save Page As PDF

No comments: