Thursday, July 16, 2009

14. நான் பாவி தான் ஆனாலும் நீர்

1.நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

2.நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

3.நான் பாவி தான் - பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

4.நான் பாவி தான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

5.நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

6.நான் பாவி தான் - அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

Save Page As PDF

No comments: