Monday, July 13, 2009

8. மன்னன் இயேசு வருகின்றார்

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)


1.மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் - அல்லேலூயா

2.பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே - அல்லேலூயா

3.வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே - அல்லேலூயா

Save Page As PDF

No comments: