Friday, July 10, 2009

5.எப்படி பாடுவேன் நான்

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்கு செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2


1.ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவர் அல்லோ - 2


2.எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன் - 2

3.கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் - 2 Save Page As PDF

No comments: