Monday, July 20, 2009

19.என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவே

அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது - என்னை

1.அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் - என்னை

2.ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கருணை செய்தேவா - என்னை

3.நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு
ஜோதி பரிசுத்தராலயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை - என்னை Save Page As PDF

No comments: