Thursday, July 16, 2009

13. கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம்பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே - நெஞ்சம்

1.கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

2.சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மைச் செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டிநீரே
அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
அப்பா உம்மனம் பெரிதே

3.எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகின்றோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

Save Page As PDF

No comments: