Wednesday, June 23, 2010

173. ஆதாரம் நீர்தானையா

ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற; கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1.உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) - என் நிலை மாற ... - ஆதாரம்

2.குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) - என் நிலை மாற ... - ஆதாரம்

3.உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) - என் நிலை மாற ... - ஆதாரம்


Save Page As PDF

1 comment:

Tech God said...

என் இயேசுவே என் நேசரே ஏன் இந்த பாடுகளோ என்ற பாடல் வரிகளை எழுதுமாறு கேட்கிறேன்