Friday, June 4, 2010

167. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் - (2)
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா .....(4)

2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
இரவும் பகலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்

3.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான்
இரவும் பகலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத் தான் நான் நேசிப்பேன்

4.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
Save Page As PDF

No comments: