Tuesday, August 11, 2009

40. அருள் ஏராளமாய் பெய்யும்

1.அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்பிக்குமே

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய் பெய்யட்டுமே

2.அருள் ஏராளமாய் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்

3.அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்

4.அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே

Save Page As PDF

No comments: