Saturday, August 1, 2009

31. மாறிடா எம்மா நேசரே

மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே - ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே


1.பாவியாக இருக்கையிலே - அன்பால்

பாரில் உன்னைத் தேடி வந்தாரே

நீசன் என்றுன்னைத் தள்ளாமலே

நேசனாக மாற்றிடவே


2.உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்

உள்ளம் போல் நேசித்ததினால்

அல்லல் யாவும் அகற்றிடவே

ஆதி தேவன் பலியானாரே


3.ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய

தேவனின் விண் சாயல் அணிய

ஆவியாலே அன்பைச் சொரிந்தார்

ஆவலாய் அவரைச் சந்திக்க


4.நியாய விதி தினமதிலே - நீயும்

நிலையாகும் தைரியம் பெறவே

பூரணமாய் அன்பு பெருக

புண்ணியரின் அன்பு வல்லதே


5.பயமதை நீக்கிடுமே - யாவும்

பாரினிலே சகித்திடுமே

அது விசுவாசம் நாடிடுமே

அன்பு ஒருக்காலும் ஒழியாதே

Save Page As PDF

No comments: