Tuesday, August 11, 2009

36. கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு அல்லேலுயா அல்லேலுயா

1.பாவத்தின் சுமையகற்றி - கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலுயா

2.நீதியின் பாதையிலே - அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலுயா

3.மறுமையின் வாழ்வினிலே - இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலுயா Save Page As PDF

No comments: