Wednesday, January 27, 2010

85. ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான்! - சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?


ஆனந்த நேமியே - எனை ஆளவந்த குரு சுவாமிய


1.கெத்செமனே யிடம் ஏகவும் - அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் - சொல்
அளவில்லாத் துயரமாகவும்


2.முழந்தாள் படியிட்டுத் தாழவும் - மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், - கொடு
மரண வாதையினில் மூழ்கவும்


3.அப்பா, பிதாவே என்றழைக்கவும், - துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், - ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்


4.ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், - உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Save Page As PDF

No comments: