Wednesday, September 30, 2009

50. கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு

கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் - கண்

2.பக்தர் நிழல் அவரே - என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே - கண்

3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் - கண் Save Page As PDF

No comments: