Showing posts with label சாலேமின் ராசா. Show all posts
Showing posts with label சாலேமின் ராசா. Show all posts

Thursday, May 6, 2010

140. சாலேமின் ராசா சங்கையின் ராசா

1.சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் - இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?

3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; - இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

5.சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; - உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

Save Page As PDF